பேருந்து பயணம் என்பது இவ்வளவு கொடுமையாக கூட இருக்க முடியுமா என்பது சென்னை பேருந்துகளில் பயணிக்கும் பொழுது உணரலாம் .. பரபரப்பான வாழ்வில் நெரிசல் மிக்க இந்த பயணங்கள் மனிதனை விரக்திநிலைக்கு கொண்டு செல்லும் என்று சொன்னால் கூட அது குறைபடுத்தி கூறுவாதாகவே இருக்கும் .. நான் அண்ணா பல்கலையில் பயில்பவன் என்பதால் , கிண்டியில் இருந்து பல்கலை கழகத்திற்கு 21G, M49, ஆகிய பேருந்துகளின் மூலம் சென்று இறங்கும் பொழுது கசக்கி தூக்கி ஏறிய பட்ட தாளாக செல்வேன் .. பெரும்பாலான பயணங்கள் , தோடு கோட்டினை தொட முடியாத கபடி வீரனை போல் , படியை தாண்டி பேருந்துக்குள் செல்ல முடியாமல் படிகட்டோடு முடிந்து விடும் ..இது எல்லாம் கூட தாங்கி கொள்ள கூடிய இன்பங்கள் தான் , அவ்வளவு நெரிசலில் பயணசீட்டு வாங்குவது , சட்ட மன்ற உறுப்பினர் தேர்தலில் நிற்பதற்கு சீட்டு வாங்குவதை விட கடினமானது .. கடவுளே சிலையில் இருந்து உயிரோடு வந்தாலும் வரலாம் ஆனால் நடத்துனர் தனது நாற்காலியை விட்டு எழுவது என்பது கனவிலும் நடக்காத நிகழ்வு... எப்படியோ ஒருவரிடம் இருந்து ஒருவராக சில்லறையை கடத்த...
உ லகில் எத்தனையோ வரலாற்று சிறப்பு மிக்க காதல் கதைகள்படித்து உள்ளோம் .. அதை உணர்ந்தும் உள்ளோம் ... அப்படியொரு கதை தான் இது .. அதில் ஒரு விசித்தரமான தகவலும் உள்ளது பரோ மன்னர்கள் எகிப்து நாட்டை ஆண்டு வந்த காலம் . அம்மன்னர்கள் தங்களுடைய சொந்த சகோதரிகளையோ இல்லை பெற்ற பெண்களையோ தாரமாக ஏற்று உறவு முறையை மிகவும் கொச்சைபடுத்தினார்கள் .யார் -யார் உறவு என்கிற பாகுபாடே இல்லாமல் போய்விட்டது .. இந்த மாதிரியான ஒரு கேவலமான முறை அழிந்து போக காதலும் ஒரு காரணமாக அமைந்தது .. ரோமானியார்கள் ஆட்சிக்குள் நுழைந்த போதுதான் இந்த விதமான மூட பழக்கங்களை அறவே ஒழிக்க மிகவும் சிரத்தை எடுத்துக் கொண்டார்கள் .. ஜூலியஸ் சீசர் என்னும் மாவீரன் விழுந்தது கிளியோபாட்ராவின் புத்திசாலிதனத்திலும் , அபரிவிதமான அழகிலும் தான் ... இரண்டு உள்நாட்டு போரின் விளைவாக இருவரும் ஒன்று சேர்ந்தனர் . அதில் ஒன்று ரோம் நகரில் இரு பிரிவினர்களுள் ஏற்பட்ட யுத்தம் ஒன்று , மற்றொன்று மிகவும் விசுவாசிகளாக இருந்த எகிப்தியர்களிடையே நட...
த மிழகத்தி ல் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் இலங்கை விவகாரத்தை வைத்து அரசியல் செய்து வரும் நிலையில், விஜயகாந்தின் தேமுதிக தனது சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான அருண்பாண்டியனை இலங்கைக்கு சத்தம் போடாமல் அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகின்றது. இலங்கைக்கு பயணம் செய்யும் தமிழக அரசியல் தலைவர்கள் மற்றும் இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள் போன்றவர்கள், மத்திய அரசு அனுமதி பெற்று தூதுக்குழுக்களில் இணைந்து செல்வதையே வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில், தேமுதிகவைச் சேர்ந்த பேராவூரணி சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான அருண் பாண்டியன், கடந்த சில தினங்களுக்கு முன்பு மிக ரகசியமாக இலங்கை சென்று அங்கு யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்ததாக கூறப்படுகின்றது. தேமுதிகவைச் சேர்ந்த பேராவூரணி சட்ட மன்ற உறுப்பினரும், நடிகருமான அருண் பாண்டியன், யாழ்ப்பாணம் வந்துள்ளது உண்மை. ஆனால், அருண் பாண்டியன் தனிப்பட்ட முறையில் ஒரு மாத சுற்றுலா விசாவில், வந்துள்ளதாக தெரிய வருகிறது. குறிப்பாக, திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் ஐங்கரன் இன்டர்நேஷனல் தலைவர் கருணாமூர்த்தியுடன் யாழ்ப்பாணம் வந்துள்ளார...
கருத்துகள்