பேருந்து பயணம் என்பது இவ்வளவு கொடுமையாக கூட இருக்க முடியுமா என்பது சென்னை பேருந்துகளில் பயணிக்கும் பொழுது உணரலாம் .. பரபரப்பான வாழ்வில் நெரிசல் மிக்க இந்த பயணங்கள் மனிதனை விரக்திநிலைக்கு கொண்டு செல்லும் என்று சொன்னால் கூட அது குறைபடுத்தி கூறுவாதாகவே இருக்கும் .. நான் அண்ணா பல்கலையில் பயில்பவன் என்பதால் , கிண்டியில் இருந்து பல்கலை கழகத்திற்கு 21G, M49, ஆகிய பேருந்துகளின் மூலம் சென்று இறங்கும் பொழுது கசக்கி தூக்கி ஏறிய பட்ட தாளாக செல்வேன் .. பெரும்பாலான பயணங்கள் , தோடு கோட்டினை தொட முடியாத கபடி வீரனை போல் , படியை தாண்டி பேருந்துக்குள் செல்ல முடியாமல் படிகட்டோடு முடிந்து விடும் ..இது எல்லாம் கூட தாங்கி கொள்ள கூடிய இன்பங்கள் தான் , அவ்வளவு நெரிசலில் பயணசீட்டு வாங்குவது , சட்ட மன்ற உறுப்பினர் தேர்தலில் நிற்பதற்கு சீட்டு வாங்குவதை விட கடினமானது .. கடவுளே சிலையில் இருந்து உயிரோடு வந்தாலும் வரலாம் ஆனால் நடத்துனர் தனது நாற்காலியை விட்டு எழுவது என்பது கனவிலும் நடக்காத நிகழ்வு... எப்படியோ ஒருவரிடம் இருந்து ஒருவராக சில்லறையை கடத்தி , இறங்க வேண்டிய நிறுத்தம் வருவதற்குள் பயணசீட்டு வாங்கிய ப
சாகுல் ஹமீது இன்று மாலை நேரம் நான் கணிபொறி உடன் இயங்கி கொண்டிருந்த நேரத்தில் , நான் கேட்டுக் கொண்டிருந்த பாடல் வரிசையில் , 'திருடா திருடா' படத்தில் வரும் 'ராசாத்தி' எனத் தொடங்கும் பாடல் கேட்க நேர்ந்தது . ஒரு கணம் , மனம் லேசாக மாறியது ,என்ன ஒரு இனிமையான குரல் .இரு முறை ஒலிக்கவிட்டு கேட்டேன் .அதே சமயத்தில் அந்த இனிமையான குரலுக்கு சொந்தம் கொண்ட ஜீவன் , இன்று நம்முடன் இல்லையே என்று ஒரு விதமான ஏக்கம் கொண்டேன் . ஆம் இந்த குரலுக்கு சொந்தக்காரர் , சாகுல் ஹமீது . A.R ரஹ்மானுடன் தொடக்க காலத்தில் இணைந்து பணி புரிந்து உள்ளார் .இவரது பாடல்கள் பெரும்பாலும் ஏ. ஆர். ரகுமான் இசைத்த தமிழ்த் திரைப்படங்களில் அமைந்துள்ளன. 1980களில் சாகுல் ஹமீது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பாடல்களைப் பாடி வந்தார். 30க்கும் மேற்பட்ட பாடல்களை இசைத்தென்றல் மற்றும் சில நிகழ்ச்சிகளில் பாடியுள்ளார். இவர் 1989ல் ஏ. ஆர். ரகுமானுடன் இணைந்து தீன் இசை மழை என்ற இஸ்லாமிய இசைப் பாடல்களை பாடிப் புகழ் பெற்றார். இன்றும் நீங்கள் அவர் பாடிய பாடல்களை கேட்க நேரிட்டால் , நிச்சயம் அந்தக் குரலின் அழகை உணரலாம் .உசிலம்பட்டி பெ
தமிழில் பயண நூல்கள் இல்லையே என்ற ஏக்கத்தை போற்றியவர் A.K .செட்டியார் . அமெரிக்கா பற்றி அவர் குறிப்பிடுகையில் , அங்கு உள்ள விசித்திரமான அதே சமயத்தில் உபயோகமான ,கண்ணியமான விளம்பர பலகைகள் பற்றிக் குறிபிட்டுள்ளார் . அந்த விளம்பரபலகைகளின் உதாரணங்களாக சில : பள்ளிக்கு முன் இருந்த விளம்பர பலகை , இது ஒரு பள்ளிக்கூடம் ,தயவு செய்து வண்டியை மெதுவாக ஓட்டுங்கள் ,ஏனென்றால் நம் குழந்தைகளிடம் நமக்கு அன்பு உண்டு . பலகாரக் கடையில் இருந்த விளம்பர பலகை , தயவு செய்து கடன் கேட்காதீர்கள் . ஏனென்றால் நாங்கள் மிகவும் ஏழைகள் . கண்ட இடங்களில் எச்சில் துப்பாமல் இருக்க , அறிவுறுத்தும் விளம்பர பலகை , நீங்கள் எச்சில் துப்பும் பழக்கம் உடையவர்காளாக இருந்தால் ,இந்த இடத்திலும் எச்சில் துப்பலாம் ,வீட்டிலிருப்ப தா கவே நீங்கள் என்ன வேண்டும் என்பது எங்கள் ஆசை , இது மாதிரியான பல விளம்பர பலகைகள் அமெரிக்காவில் இருந்ததாக A.K .செட்டியார் கூறுகிறார் . பொதுவாக ,உத்தரவு செய்வதை விட ,கேட்டுக் கொள்வது தான் சிறந்த முறை .பொது மக்களை ,ஒரு காரியத்தைச் செய்யும்படிக் கேட்
கருத்துகள்