இறந்துபோன பிரபலங்களின் கதை !

   இங்கிலாந்தில் உள்ள ஒரு  நிறுவனம் வருடந்தோறும் ஒரு வினோதமான காரியம் செய்து  வருகிறது  .ஒரு குறிப்பிட்ட வருடத்தில் இறந்து போனவர்களில்  பிரபலமானவர்களைத் தேர்ந்தெடுத்து வகை வாரியாக  பிரித்து , தனிதனி புத்தகமாக வெளியிட்டு வருகிறார்கள் .கிறுக்குத் தனமான புள்ளிகள்,  ஹீரோக்கள் ,பொழுதுபோக்கு  கலைஞர்கள்  , போக்கிரிகள் இது போன்ற  தலைப்புகளில் புத்தகம் வருகிறது . மனிதர்களின் குணாதிசியங்களை  காட்டுவதே தங்கள் நோக்கம் என்கிறார்கள் .  அந்த   புத்தகங்களில்  இருந்த சில வினோத தகவல்கள் : 

  ஆர் .டி .லாங் என்ற மனோத்தத்துவ நிபுணர்  ,தினம் ராத்திரி மொட்டை மாடிக்கு போய்  உட்கார்ந்துக்  கொண்டு சந்திரனைப்  பார்த்து ஊளையிடுவாராம்  . ( அமாவாசையன்று என்ன  செய்வாரோ  என்று தெரியவில்லை) . ஆல்பி   ஹிண்ட்ஸ்   என்ற கொள்ளைக்காரன் எப்போதும் தன வழக்குக்குத் தானே வழக்கறிஞராக ஆஜராவனாம் .ஏதாவது சட்டப் பிரச்சினையில் நீதிபதி தலையை   சொரிந்து கொண்டாரானால் ' கனம் நீதிபதி அவர்களே , அந்தப் பிரச்சினையில் தங்களுக்கு உதவ செய்ய  முடியும் என்று  நினைக்கிறேன் என்று  சொல்வானாம்

  ஜெப்ரே பெர்னார்டு என்ற  எழுத்தாளர் , தன் கல்லறையில் பொரிக்க வேண்டிய வாசகத்தை முன்னதாகவே எழுதி வைத்திருந்தாராம் .  அதில்   ' ... ..இவர் இரண்டு எழுதாத புத்தகங்களையும் , விரோதிகளாகிவிட்ட சில சிநேகிதர்களையும் விட்டுச்   சென்றுள்ளார்  ' என்று எழுதி   இருக்கிறார்
 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேருந்து பயணம்

இனிய பாடகர் சாகுல் ஹமீது

விளம்பர பலகை இப்படித்தான் இருக்க வேண்டும் ! ...